க.பொ.த உயர்தர பரீட்சைக்காக நாடு முழுவதும் 303 இணைப்பு மத்திய நிலையங்களின் கீழ் 2180 பரீட்சை மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டு பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்படுத்தப்பட்டுள்ளன என பரீட்சை ஆணையாளர் நாயகம் டப்ளியு.எம்.என்.ஜே.புஷ்பகுமார தெரிவித்தார்.
திட்டமிட்டபடி எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி ஆரம்பமாகி 13ஆம் திகதி வரை நடைபெறும் என்றும் மீண்டும் 24ஆம் திகதி தொடக்கம் செப்டெம்பர் 8ஆம் திகதி வரை நடைபெறும் என்றும் ஆணையாளர் நாயகம் சுட்டிக்காட்டினார்.
பாடசாலை ரீதியாக இம்முறை 23,072 பேரும் தனிப்பட்ட ரீதியாக 72,997 பேரும் விண்ணப்பட்டுள்ளதுடன் பாடசாலை மாணவர்களுக்கான அனுமதிப்பத்திரங்கள் பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்றும் தனிப்பட்டரீதியான பரீட்சார்த்திகளுக்கான அனுமதிப்பத்திரங்கள் அவர்களுடைய தனிப்பட்ட முகவரிக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.











0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !