அமைச்சர்களின் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டிருந்த வாகனங்களை மீளக் கையளிப்பதற்கான கால அவகாசம் நிறைவுபெற்றுள்ளது.
இதற்கமைய வாகனங்களை மீளக் கையளிக்கத் தவறியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பொது நிருவாக மற்றும் மாகாண சபைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
அமைச்சர்களின் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டிருந்த வாகங்களை நேற்றைய தினத்திற்குள் மீளக் கையளிக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் அறிவுறுத்தல் விடுத்திருந்ததாக அமைச்சின் செயலாளர் ஜினசிறி தடல்லகே மேலும் தெரிவித்துள்ளார்.











0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !