Headlines
Admin-message
Sekar_Swiss SivaTravel Sekar_Swiss Sekar_Swiss

உங்கள் கையடக்க தொலைபேசியில் எமது செய்திகளை பெற f இடைவெளி AvathaniMedia என டைப்செய் து 40404 க்கு அனுப்புங்கள்

ராஜிவ் கொலை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக குரல் கொடுக்க வேண்டியது எமது கடமை -இந்திய அரசு

Written By We Are Anonymous on Tuesday, July 21, 2015 | Tuesday, July 21, 2015

ராஜிவ் கொலை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக குரல் கொடுக்க வேண்டியது எமது கடமை -இந்திய அரசு

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக குரல் கொடுக்க வேண்டியது தமது கடமை என இந்திய மத்திய அரசாங்கம் உச்சநீதிமன்றத்தில் அறிவித்துள்ளது.
இந்த வழக்கில் குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்ட நளினி, முருகன்,சாந்தன், பேரறிவாளன், உள்ளிட்ட ஏழு பேரையும் விடுதலை செய்வதற்கு தமிழக அரசு கடந்த வருடம் தீர்மானித்திருந்தது.
தமிழக அரசாங்கத்தின் இந்த தீர்மானத்தை ஆட்சேபித்து மத்திய அரசாங்கம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொது நல மனு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
ஐந்து நீதியரசர்கள் கொண்ட குழாம் முன்னிலையில் நடைபெற்ற விசாரணையின்போது மாநில அரசுகளின் உரிமைகளில் மத்திய அரசாங்கம் தலையிட முடியுமா என கேள்வி எழுப்பி தமிழக அரசு தாக்கல் செய்திருந்த மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
1991 ஆம் ஆண்டு ராஜிவ் காந்தியை இலக்குவைத்து நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் 18 பேர் பலியாகி மேலும் 48 பேர் படுகாயமடைந்ததாக மத்திய அரசாங்கம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது
இவர்களுக்கு நீதியைப் பெறுக்கொடுப்பதற்கான பொறுப்பு மத்திய அரசாங்கத்திற்கு உள்ளதெனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ராஜிவ் காந்தி கொலை வழக்கின் குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர்களை விடுதலை செய்வதற்கு தமிழக அரசாங்கம் தீர்மானித்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
Share this article :




முக்கிய குறிப்பு: அவதானி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு அவதானி நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். அத்துடன் உங்களது செய்திகளை Avathanimedia@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்


0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

Avathani Unicode

Bcas Campas

✔✔ A/L Result ✔✔

✔✔ Web Desgin ✔✔

Total Pageviews

 

உங்கள் கையடக்க தொலைபேசியில்எமது செய்திகளை பெற f இடைவெளி AvathaniMedia என டைப்செய்து 40404 க்கு அனுப்புங்கள்

Sekar_Swiss SivaTravel Sekar_Swiss Sekar_Swiss
Copyright © 2015-2016 Sri Lanka First and Fast Tamil News | Avathani 24x7. All rights Reserved. Design by Mohamed Hasni